Monday, October 4, 2010

பாஸ் என்கிற.cinimaonline.blogspot.com

பாஸ் என்கிற பாஸ்கரன் – திரை விமர்சனம்

படிப்பு ஏறாமல் வெட்டி யாக திரிபவர் ஆர்யா. அவர் அண்ணன் சுப்பு பஞ்சு, கால்நடை டாக்டர். ஒரு தங்கை. வீட்டில் அம்மாவை தவிர எல்லோரும் ஒன்றுக் கும் உதவாதவன் என அர்ச்சிக் கின்றனர். சலூன் கடை நடத்தும் நண்பன் சந்தானத்துடன் குடி கொண்டாட்டம் என சுற்றுகிறார்.
ஒரு கட்டத்தில் அரியர் தேர்வு எழுத போய் பரீட்சை ஹாலுக்கு வரும் ஆசிரியை நயன்தாராவை பார்த்து காதல் வயப்படுகிறார். ஏதேச்சையாக நயன் தாரா அக்காவே அண்ணன் மனைவியாக காதலை தீவிர மாக்குகிறார். அண்ணியிடம் தங்கையை தனக்கு கட்டி வைக்குமாறு கேட்கிறார். வேலை இல்லாதவருக்கு பெண் தர முடியாது என அவர் மறுக்கிறார். நயன்தாரா பெற்றோரும் ஒதுக்குகின்றனர்.
இதனால் ரோஷமாகி பணத்தோடு வருகிறேன் என சவால் விட்டு வீட்டிலிருந்து வெளியேறுகிறார். பாஸ் ஆகா விட்டால் பணம் வாபஸ் என்ற உத்தர வாதத்தோடு டூட்டோரியல் ஆரம்பிக்கிறார். அங்கு சேரும் மாணவர்கள் படிக்காமல் ரவுடித்தனம் செய்கின்றனர். தொழில் நசுங்கும் சூழலில் இடிந்து போய் உட்காருகிறார். அதன் பிறகு அவர் எடுத்த முயற்சி என்ன? பணம்சம் பாதித்து நயன்தாராவை கை பிடித்தாரா? என்பது கிளை மாக்ஸ்…
காதலும் காமெடியுமாய் கதையை கலகலப்பாக நகர்த்துகிறார் இயக்குனர் ராஜேஷ். கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்துகிறார் ஆர்யா. நகைச்சுவையிலும் பாஸ் ஆகி இருக்கிறார். சந்தா னத்துடன் இணைந்து அவர் செய்யும் லொள்ளுபடம் முழுக்க நீண்டு வயிற்றை பதம் பார்க்கிறது.
பாக்கெட்டில் பிட் பேப்பர் களை திணித்து ஒவ்வொன்றும் எங்கே இருக்கிறது என்ற அட்டவணையும் தயாரித்து பரீட்சை ஹாலுக்கு செல் வதில் இருந்து காமெடி தர்பார் ஆரம்பிக்கிறது. சந்தா னத்திடம் ஐடியா கேட்டு நயன்தாராக்கு காதல் வலை வீசி தோற்பது… அண்ணனுக்கு பெண் பார்க்க அவரது வீட்டுக்கு போய் நயன்தாரா தந்தை என்ன வேலை பார்க்கிறீர்கள் என்று கேள்வி கேட்பதை தவிர்க்க சம்பந்தம் இல்லாமல் எதையோ பேசி உளறுவது… டூட்டோரியலுக்கு ஷகீலாவை டீச்சராக்கி மாணவர்களை அமைதியாக்குவது என சிரிப்பிலேயே கட்டி போடுகிறார்.
மாணவர்கள் அடாவ டியை சமாளிக்க முடியா மல் ஆசிரியர் ஓடிப்போக பார்வை இழந்த பெண்ணை ஆசிரியையாக்கி மாணவர் களை சென்டிமென்டால் வசியப்படுத்துவது ஜீவன்…
சலூன் கடை நடத்துபவ ராக வரும் சந்தானமும் திகட்ட திகட்ட காமெடி படையலிடுகிறார். ஆர்யா விடம் சிக்கி அவர் படும் அவஸ்தைகள் அமர்க் களம்…
ஆர்யாவுக்கு வேலை இல்லாததை சுட்டிக்காட்டி அவமானப்படுத்தும் நயன் தாரா தந்தை சித்ரா லட்சு மணனை போதையில் போய் பலர் முன்னிலையில் அசிங்கப்படுத்துவது தியேட்ட ரையே குலுங்க வைக்கிறது. இருவரும் “நண்பேன்டா” என உணர்ச்சி வசப்பட்டு பேசும் வசனம் ரகளை…
நயன்தாரா, காதலை மனசுக்குள் வைத்து வெறுப்பை கக்குவதில் பளிச் சிடுகிறார். ஆர்யா அண்ண னாக வரும் சுப்பு பஞ்சு ஈர்க் கிறார். பழைய பாடல் பின் னணியில் விஜயலட்சுமி மேல் காதல் வயப்படும் சீன்கள் ஆரவாரம். அறை கதவை பூட்டி மறந்து போய் சாவியுடன் ஆர்யா சினிமா வுக்கு போய் விட முதலிரவு தடைப்பட்டு இம்சைபடுவதில் வயிற்றை ரணமாக்குகிறார். அவர் மனைவியாக வரும் விஜயலட்சுமியும் அம்சம்…
ஜீவா சிறிது நேரம் வந்தாலும் கலக்கல். நான் கடவுள் ராஜேந்திரன் முரடனாக பய முறுத்துகிறார். அவர் மகனாக வரும் அஸ்வின் ராஜா சாப்பாட்டு ராமனாக கலகலப்பூட்டுகிறார்.
ஆர்யா மேல் நயன்தாரா வுக்கு காதல் மலரும் சீன் களில் அழுத்தம் இல்லை… கிளைமாக்சில் சினிமாத் தனத்தை தவிர்த்து இருக்கலாம்…
யுவன்சங்கர் ராஜா இசையில் பாடல்கள் கவர்கிறது. ஷக்தி சரவணன் ஒளிப்பதி வும் பலம்.

 


No comments:

Post a Comment